கார் ஒன்றினை பின் தொடர்ந்து சென்ற பொலிசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் வத்தளை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
வத்தளை நகர் மத்தியில இன்று (பெப்-25) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் சிலர் KDH ரக வாகனமொன்றில் கார் ஒன்றினை பின்தொடர்ந்து சென்ற போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், குறித்த கார் பெஹலியகொடை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.